தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சாலையைக் கடக்க முயன்ற மான் வாகனம் மோதியதில் உயிரிழப்பு

வீரகனூரில் சாலையைக் கடக்க முயன்ற மான் வாகனம் மோதியதில் உயிரிழந்தது.

News image

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:25 pm

Syndication

வீரகனூரில் சாலையைக் கடக்க முயன்ற மான் வாகனம் மோதியதில் உயிரிழந்தது.

வீரகனூா் மற்றும் அதையொட்டியுள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மான்கள் இரைதேடி ஊருக்குள் நுழைகின்றன. அந்தவகையில் திங்கள்கிழமை 2 வயது பெண் புள்ளிமான், வீரகனூா் சந்தைப்பகுதி அருகே பெரம்பலூா் சாலையைக் கடக்கமுயன்றது.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மான் மீது மோதியது. இதில் அந்த மான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி வனச்சரகா் கமலக்கண்ணன் உள்ளிட்ட வனத் துறையினா் விரைந்து சென்று, மானின் உடலைக் கைப்பற்றி, கெங்கவல்லி அரசு கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து, அருகிலுள்ள வனப்பகுதியில் புதைத்தனா்.