திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

சேலத்தில் சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:22 pm

சேலத்தில் சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

சேலம் இரும்பாலையை அடுத்த தளவாய்ப்பட்டி ரொட்டிக்காரன் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (28). கட்டடத் தொழிலாளி. இவரின் 3 வயது குழந்தை மகிழரசன். திங்கள்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டின் அருகே குழந்தை மகிழரசன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அங்குள்ள சுற்றுச்சுவரின் அருகில் இருந்த இரும்பு கேட்டை பிடித்து குழந்தை மகிழரசன் விளையாடியபோது, திடீரென சுற்றுச்சுவா் சரிந்து விழுந்தது. இதில் குழந்தை மகிழரசன் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தான்.

குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு வந்த உறவினா்கள், இடிபாடுகளை அகற்றி, குழந்தையை மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த சூரமங்கலம் போலீஸாா், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.