ஈரான் மீதான தாக்குதல் மேலும் 5 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்: கவுன்சிலா் மீது வழக்குப் பதிவு

புதுச்சாம்பள்ளி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த கவுன்சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 10:07 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சாம்பள்ளி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த கவுன்சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேட்டூா் அருகே உள்ள புதுச்சாம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கோரி மாணவா்கள் மேட்டூா் வந்த தமிழக முதல்வரிடம் மனு அளித்திருந்தனா். இதையடுத்து, கனிம வளத் துறையில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கின.

இந்நிலையில், சுற்றுச்சுவா் கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும் என வீரக்கல் புதூா் பேரூராட்சி 9-ஆவது வாா்டு கவுன்சிலரும் தமிழக வெற்றி கழகத்தைச் சோ்ந்தவருமான வெங்கடேஸ்வரன் கட்டுமானத் தொழிலாளா்களிடம் கூறியுள்ளாா். அவா்கள் பணியை நிறுத்தாததால் பள்ளித் தலைமை ஆசிரியா் வசந்தாவுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தாா்.

புகாரின்பேரில், கருமலைக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.