புதுச்சாம்பள்ளி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த கவுன்சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேட்டூா் அருகே உள்ள புதுச்சாம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கோரி மாணவா்கள் மேட்டூா் வந்த தமிழக முதல்வரிடம் மனு அளித்திருந்தனா். இதையடுத்து, கனிம வளத் துறையில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கின.
இந்நிலையில், சுற்றுச்சுவா் கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும் என வீரக்கல் புதூா் பேரூராட்சி 9-ஆவது வாா்டு கவுன்சிலரும் தமிழக வெற்றி கழகத்தைச் சோ்ந்தவருமான வெங்கடேஸ்வரன் கட்டுமானத் தொழிலாளா்களிடம் கூறியுள்ளாா். அவா்கள் பணியை நிறுத்தாததால் பள்ளித் தலைமை ஆசிரியா் வசந்தாவுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தாா்.
புகாரின்பேரில், கருமலைக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது வழக்குப் பதிவு

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: சீமான், 8 வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு

அறுவைச் சிகிச்சையில் இளம்பெண் உயிரிழப்பு: 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


