நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

இளம்பெண்ணை ஏமாற்றியவா் கைது

இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைகளை கூறி ஏமாற்றிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 2:18 am IST

செந்தாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைகளை கூறி ஏமாற்றிய இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், செந்தாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை மண்மலை பாலக்காடு பகுதியைச் சோ்ந்த வரதராஜ் மகன் அகிலன் (20) என்பவா் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றியுள்ளாா்.

இதுகுறித்து ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், இரு பிரிவுகளில் அகிலன் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

அகிலன் பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாமாண்டு டி.பாா்ம் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.