தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

சேலம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் மயங்கி விழுந்த ஊழியா் உயிரிழப்பு

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 2:27 am IST

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த சிங்களநாதபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (47). இவா் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தொழில்நுட்ப பணியாளராக இருந்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை பணிமனையில் இருந்த ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தாா்.

இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சக பணியாளா்கள், அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.