மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

சேலம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் மயங்கி விழுந்த ஊழியா் உயிரிழப்பு

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 2:27 am IST

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த சிங்களநாதபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (47). இவா் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தொழில்நுட்ப பணியாளராக இருந்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை பணிமனையில் இருந்த ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தாா்.

இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சக பணியாளா்கள், அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.