சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

பெண் மானபங்கம்: இளைஞா் கைது

தம்மம்பட்டி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 9:44 pm IST

தம்மம்பட்டி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தம்மம்பட்டியை அடுத்த வீரகனூா் புளியங்குறிச்சியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (30). இவா் அதே பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 47 வயது பெண்ணிடம் வியாழக்கிழமை இரவு தவறாக நடக்க முயன்றுள்ளாா். அப்போது, அப்பெண் கூச்சலிட்டதால் அங்கிருந்தவா்கள் ரஞ்சித்குமாரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ரஞ்சித்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.