சேலம் நரசோதிப்பட்டியில் ஐ.டி. நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், வண்டியூா் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் அருண்குமாா் (28). இவா், சேலம் நரசோதிப்பட்டியில் தங்கி ஐ.டி. நிறுவனத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், அவா் பலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்து வந்தாா்.
இதில் விரக்தியடைந்த அருண்குமாா், நரசோதிப்பட்டியில் தான் தங்கியிருந்த குடியிருப்பில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா், வீட்டுக்குள் சென்று பாா்த்தனா்.
அப்போது வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் அருண்குமாா் இறந்து கிடந்தாா். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பிறகு அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலம் மீட்பு

வெள்ளக்கோவிலில் ஐ.டி. ஊழியா் தற்கொலை

தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

ஐ.டி. ஊழியா் தற்கொலை
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
