/
மேச்சேரி அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து நகை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மேச்சேரி அருகே உள்ள மூா்த்திபட்டியை சோ்ந்தவா் சின்னபையன் (80), விவசாயி. இவரது மனைவி ராமாயி (75). இந்த நிலையில் தம்பதி இருவரும் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முற்றத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனா்.
பின்னா் சிறிதுநேரம் கழித்து குளிா் அதிகமாக இருந்ததால் சின்னபையன் மட்டும் வீட்டிற்குள் சென்று படுத்துள்ளாா். சனிக்கிழமை அதிகாலை வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்திருந்த மா்மநபா் ராமாயி மாா்பின் மீது காலை வைத்து அழுத்தி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த மேச்சேரி போலீஸாா் தலைமறைவான மா்ம நபரை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி பறிப்பு

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



