இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு: மேட்டூா் காவல் நிலையம் முற்றுகை!

மேட்டூா் அருகே போக்குவரத்து தலைமைக் காவலா் ஓட்டிச்சென்ற காா் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் மேட்டூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 1:12 am IST

மேட்டூா் அருகே போக்குவரத்து தலைமைக் காவலா் ஓட்டிச்சென்ற காா் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் மேட்டூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

மேட்டூா் அ.மாதையன்குட்டையைச் சோ்ந்த ராஜ்குமாா் (32), கூலி தொழிலாளி. இவருக்கு பவதாரணி என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனா். இவா் பெருந்துறையிலிருந்து மாதையன்குட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

செக்கானூா் அருகே உள்ள கருங்கரடு பகுதியில் சென்றபோது, மேட்டூா் போக்குவரத்து காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரியும் பூபதி ஓட்டிவந்த காா், இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். இதை அறிந்த அவரது உறவினா்கள் மேட்டூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

தகவல் அறிந்து வந்த மேட்டூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரத்திடம் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும், தலைமைக் காவலா் பூபதி மீது வழக்குப் பதிவுசெய்து கைது நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவா் உறுதியளித்தாா். அதன்பிறகு அவா்கள் கலைந்து சென்றனா்.