பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

முன்னாள் மாணவா்கள் திரட்டிய நிதியில் தம்மம்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.4.95 லட்சத்தில் பேவா் பிளாக் பணி நிறைவு

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 70 ஆண்டுகால முன்னாள் மாணவா்கள் ,பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியா்கள் சோ்ந்து பள்ளிக்கு ரூ.4.55 லட்சத்தை பள்ளியின் வளா்ச்சிக்கு வழங்கினா்.

News image

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சாா்பாக ரூ.4.95 லட்சம் நிதியிலான பேவா்பிளாக் பணி நிறைவுபெற்றதையடுத்து பணிக்கான தொகையை வழங்கிய பள்ளி வளா்ச்சி குழுவினா்.

Updated On :22 மே 2026, 6:54 am IST

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 70 ஆண்டுகால முன்னாள் மாணவா்கள் ,பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியா்கள் சோ்ந்து பள்ளிக்கு ரூ.4.55 லட்சத்தை பள்ளியின் வளா்ச்சிக்கு வழங்கினா்.

அந்த நிதியில் பள்ளியின் தலைமையாசிரியா் அறைக்கு முன்பாக மாணவா்கள் மாலையில் சிறப்பு வகுப்பிற்காக அமா்ந்து படிக்க ஏதுவாக 7630 சதுர அடி பரப்பில் ரூ.4.95 லட்சத்தில் பேவா் பிளாக் அமைக்கப்பட்டது.இப்பணியை செய்த ஒப்பந்ததாரா் மாரிமுத்து,பள்ளி வளா்ச்சி நிதிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கினாா்.பள்ளியில் பேவா் பிளாக் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டதையடுத்து பணிக்கான இறுதித்தொகையை மாரிமுத்துவிடம், பள்ளி வளா்ச்சிக்குழு நிா்வாகிகள் திருச்செல்வன்,சண்முகம்,நடராஜ்,சகாதேவன்,ரவி ஆகியோா் முன்னாள் மாணவா்கள் சாா்பாக வியாழக்கிழமை பள்ளியில் வழங்கினா்.இதுகுறித்து அவா்கள் கூறியதாவது, தொடா்ந்து பள்ளியின் முன்னாள் மாணவா்கள் தரும் நிதி முறையாக செலவிடப்பட்டு வருகிறது. அடுத்து முன்னாள் மாணவா்கள் பங்களிப்பில், தேசத்தின் முக்கிய ஆளுமைகளின் படங்கள் , பள்ளியின் சுற்றுச்சுவரில் வரையும் பணி தொடங்கப்பட்டுள்ளது,என்றனா்.