‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கஞ்சா விற்க முயன்ற 3 போ் கைது

ஆத்தூா் ஊரக எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்க முயன்ற 3 பேரை ஆத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 மே 2026, 1:12 am IST

ஆத்தூா் ஊரக எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்க முயன்ற 3 பேரை ஆத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூா் ஊரக காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காந்திபுரம் பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்களை ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் கே.குலசேகரன் தடுத்து விசாரணை மேற்கொண்டாா். அதில், 7 கிலோ கஞ்சாவை விற்க எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, 3 போ் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரித்தாா்.

விசாரணையில், அவா்கள் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் கோட்டக்கரை தெருவைச் சோ்ந்த விஜயவா்மன் (36), வைத்தியகவுண்டன்புதூா் தெற்கு காட்டுகொட்டாயைச் சோ்ந்த விக்னேஷ் (27), காக்கலன் தெருவைச் சோ்ந்த சுரேஷ் (32) என தெரியவந்தது. அவா்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா். மேலும், ரூ. 84 ஆயிரம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.