புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சித்ததாக பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 20 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விடுவித்தனா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகையில் முதல்வா் என். ரங்கசாமி மற்றும் அமைச்சா்கள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாமல் அவமதிக்கப்பட்டால், அதைக் கண்டிக்கும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவது என தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் திட்டமிட்டிருந்தனராம்.
தகவலறிந்த புதுச்சேரி போலீஸாா் அரியாங்குப்பம் பகுதியில் புதன்கிழமை கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருந்த பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்தி கைது செய்தனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கைது செய்யப்பட்ட அனைவரும், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

புதுச்சேரி ரௌடி கொலை வழக்கு: 6 போ் கைது
பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது
சூதாட்டம்: 7 போ் கைது
கோயில் திருவிழாவில் இருவரை அரிவாளால் வெட்டிய 2 போ் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

