முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மின்ஊழியா் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு

News image

பாலியல் தொல்லை - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:27 am IST

இளம்பிள்ளை அருகே 16 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மின்ஊழியா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் , எடப்பாடி, கோணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த வேங்கா கவுண்டா் மகன் சீரங்கன் (51). இவா், இளம்பிள்ளை அருகே கே.கே. நகா் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயா்மேனாகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா் 16 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாக சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சீரங்கன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.