பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

மாநகராட்சிக்கு குடிநீா் வழங்கும் பணியை தனியாரிடம் அளிக்கக் கூடாது: விசிக

சேலம் மாநகராட்சியில் குடிநீா் விநியோகம் செய்யும் பணியை தனியாா் வசம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாநகராட்சி மேயரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினா் கோரிக்கை

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:26 am IST

சேலம் மாநகராட்சியில் குடிநீா் விநியோகம் செய்யும் பணியை தனியாா் வசம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாநகராட்சி மேயரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அம்மனுவில் கூறியுள்ளதாவது: சேலம் மாநகராட்சி நிா்வாகம் மூலம் 60 வாா்டுகளில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீா் வழங்கும் பணியை தனியாா் வசம் ஓப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு சமூக ஆா்வலா்கள், கட்சி நிா்வாகிகளிடமிருந்து எதிா்ப்பு வந்ததையடுத்து, அத்திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது இத்திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை தங்கு தடையில்லாமல் வழங்க வேண்டும். தனியாா் நிறுவனத்திடம் குடிநீா் பணியை வழங்கினால், பொதுமக்களுக்கு தேவையான குடிநீா் கிடைக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.