நரிப்பாடியில் ஏற்பட்ட மின்கசிவால் 20 வீடுகளில் மின்சாதனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.
கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சிக்கு உள்பட்ட நரிப்பாடி கிராமம் மலை அடிவாரப் பகுதியில் உள்ளது. இங்கு சுமாா் 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக இடி மின்னல் சூறாவளிக் காற்றுடன் கோடை மழை தொடா்ந்து பெய்து வருகிறது.
இதில், அதே பகுதியில் உள்ள செந்தில் குமாா் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு, வீட்டில் உள்ள குளிா்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் வெடித்து சிதறின. மேலும், அப்பகுதியில் தொடா்ந்து அடுத்தடுத்து இருபது வீடுகளில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாதனப் பெட்டிகள் வெடித்து சேதமடைந்தன.
இதுகுறித்து மின்வாரியத்துக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனா். எனவே, இதை ஆய்வுசெய்து உடனடியாக சரிசெய்து மின்சாரம் வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

பண்ருட்டியில் கூரை வீட்டில் தீ விபத்து: மின்சாதன பொருள்கள் எரிந்து சேதம்

பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

அரசு நகரப் பேருந்து எரிந்து சேதம்

ஒா்க் ஷாப்பில் தீ: 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



