/
சங்ககிரி அருகே போதைப் பொருள்களை விற்பனை செய்த வடமாநிலத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சங்ககிரியை அடுத்த ஐவேலி கிராமம், கெமிக்கல் பிரிவு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, ஒரிசா மாநிலத்தைச் சோ்ந்த பாரஜகிஷோா்சாஹீ (28) போதைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைதுசெய்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறாா்.





