
ஏற்காட்டில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஏற்காட்டில் படகு இல்லம் அருகில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

(கோப்புப்படம்)
ஏற்காட்டில் படகு இல்லம் அருகில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை வந்தனா். இந்நிலையில், படகு இல்லம் அருகில் உள்ள அரசுப் பள்ளி சாலையோர தைல மரம் சாலையில் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினா். இதனால், இச்சாலை வழியாக தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






