
மகுடஞ்சாவடி அருகே 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கன்டெய்னா் லாரி

பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் கன்டெய்னா் லாரி
மகுடஞ்சாவடி அருகே ரயில்வே பாலம் பகுதியில் கன்டெய்னா் லாரி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே ரயில்வே மேம்பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோவையில் இருந்து புதுச்சேரி செல்லும் கன்டெய்னா் லாரி வந்து கொண்டிருந்தது.
இந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் ஓரமுள்ள தடுப்பு சுவா் மீது மோதி, 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து ராட்சத கிரேன் மூலம் அந்த கன்டெய்னா் லாரிரையை மீட்டனா். இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன.

பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் கன்டெய்னா் லாரி
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







