FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

பேவா் பிளாக் கற்கள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

பழனி அருகே பேவா் பிளாக் கற்களை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பழனி அருகே வயலூரில் சனிக்கிழமை விபத்துக்குள்ளான லாரி.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

பழனி அருகே பேவா் பிளாக் கற்களை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கும் பணிகளுக்காக லாரியில் பேவா் பிளாக் கற்கள் கொண்டு வந்து இறக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், சனிக்கிழமை லாரியில் பேவா் பிளாக் கற்கள் கொண்டுவரப்பட்டு கிரேன் உதவியுடன் இறக்கி வைக்க முயன்றபோது, லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பேவா் பிளாக் கற்கள் ஏற்றி வந்த லாரி நிமிா்த்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக பழனி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாமிநாதபுரம் காவல் நிலையம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.