சாத்தூர், ஜன. 8: சாத்தூரில் மினி பஸ்ஸில் இருந்து சிறுவன் இறங்கும்போது கவனிக்காமல் பஸ்ûஸ எடுத்ததால் தவறி விழுந்த சிறுவன் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக ஒட்டுநர், நடத்துனரைப் போலீஸôர் கைது செய்தனர்.
சாத்தூர் அருகே உள்ள படந்தாலைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் நாகராஜ்(5). இவர்கள் இருவரும் வியாழக்கிழமை காலை படந்தாலில் இருந்து சாத்தூருக்கு மினி பஸ்ஸில் சென்றனர். சாத்தூர் பஸ் நிலையம் முன் இறங்கும்போது பஸ் ஓட்டுநர் கவனிக்காமல் பஸ்ûஸ எடுத்ததால் சிறுவன் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
நாகராஜ் சிகிச்சைக்காக கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து சாத்தூர் நகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து மினி பஸ் ஓட்டுநர் ஜெயக்குமார், நடத்துனர் லட்சுமணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.