ராமநாதபுரம், ஜன. 8: ராமநாதபுரத்தில் நகைச்சுவை மன்றம் துவக்குவது தொடர்பான ஆலோசனைக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து இதன் அமைப்பாளர்களும்,ராமநாதபுரம் தமிழ்ச்சங்க உறுப்பினர்களுமான எஸ்.ஜோதிதாசன்,ஆர்.ஜெய்சங்கர்,பா.தீனதயாளன் ஆகியோர் கூறியதாவது: வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது போல, மனம் விட்டுச் சிரிப்பதால் இதய நோய்கள் வராது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ராமநாதபுரத்தில் பொழுது போக்க சினிமாவைத் தவிர வேறு இடம் இல்லை என்பதாலும், சிறுவர்களையும்,பெரியவர்களையும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்க நகைச்சுவை மன்றம் துவக்கப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள முகம்மது சதக் வணிக வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாதம் தோறும் நகைச்சுவை மன்றங்களை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பது குறித்து ஆலோசனைகளும் நிர்வாகிகள் தேர்வும் நடைபெறுகிறது என அவர்கள் தெரிவித்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.