விவசாய தொழில்நுட்ப கருத்தரங்கம்

தேனி, ஜன. 8:÷தேனி, காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண்மை அறிவியல் மையத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. ÷இந்தக் கருத்தரங்க
Updated on
1 min read

தேனி, ஜன. 8:÷தேனி, காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண்மை அறிவியல் மையத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

÷இந்தக் கருத்தரங்கிற்கு பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் வி.பொன்னுச்சாமி தலைமை வகித்தார். சென்டெக்ட் நிறுவனத்தின் தலைவர் பெ.பச்சைமால் வரவேற்றார். மாவட்ட விவசாய இணை இயக்குநர் செல்லத்துரை முன்னிலை வகித்தார்.

÷தென்னை, மா, முந்திரி மற்றும் கரும்பு சாகுபடியில் கடைப்பிடிக்கப்படும் நவீன தொழில்நுட்பங்கள், அரசுத் திட்ட உதவிகள் ஆகியவை குறித்து பேராசிரியர் ஹென்றி லூயிஸ், வேளாண்மை அறிவியல் துறை செயற்பொறியாளர் ஞானப்பிரகாசம் ஆகியோர் பேசினர்.

÷நபார்டு வங்கி மாவட்ட பொது மேலாளர் மணி, வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் மதன்மோகன், மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.பாண்டியன், சென்டெக்ட் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com