சௌராஷ்டிரா கல்லூரி விளையாட்டு விழா

திருப்பரங்குன்றம், மார்ச் 28:    மதுரை பசுமலை செüராஷ்டிரா கல்லூரியில் 44-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.  கல்லூரியின் செயலர் எஸ்.வி.எஸ். சிவநாத் தலைமை வகித்தார். கல்லூரியின் தலைவர் எஸ்.கே.ஜெகன்ந
Updated on
1 min read

திருப்பரங்குன்றம், மார்ச் 28:    மதுரை பசுமலை செüராஷ்டிரா கல்லூரியில் 44-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

 கல்லூரியின் செயலர் எஸ்.வி.எஸ். சிவநாத் தலைமை வகித்தார். கல்லூரியின் தலைவர் எஸ்.கே.ஜெகன்நாதன், பொருளாளர் பி.கே.மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   பேராசிரியர் டி.எஸ். பாலகிருஷ்ணன் வரவேற்றார். விளையாட்டுத் துறைப் பேராசிரியர் எஸ்.ஆர்.வி. ரவீந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரியின் முதல்வர் ஆர்.எல். ராம்நாத் தலைமையுரை ஆற்றினார்.

   விழாவில், ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தமிழ்நாடு ரஞ்சித் டிராபி கிரிக்கெட் வீரராகிய கே.பி. அருண்கார்த்திக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில்:

   மாணவர்கள் கடின உழைப்போடு தன்னம்பிக்கையுடன் இலக்கை அடைய முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த முறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்றார்.

 விழாவில், பல்கலைக்கழக அளவில் தொடர்ந்து செüராஷ்டிரா கல்லூரி 14-வது முறையாக டேபிள் டென்னிஸ் விளையாட்டிலும், 9-வது முறையாக ஹாக்கியிலும் முதல் பரிசுகளை வென்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.  பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

  விழாவில், கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டி.ஆர். ராஜாராம், ரகுநாத், பாலாஜி, குமரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com