தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆதரவு!முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

சித்திரைத் திருவிழா: அழகர்கோவில் உண்டியல் வருவாய் ரூ.49 லட்சம்

அழகர்கோவிலில் இருந்து சித்திரைத் திருவிழாவுக்காக கள்ளழகர் மதுரை வந்து திரும்பியதில், பக்தர்கள் அளித்துள்ள உண்டியல் காணிக்கையாக ரூ. 49.51 லட்சம் கிடைத்துள்ளது

Updated On :12 மே 2013, 6:01 am IST

அழகர்கோவிலில் இருந்து சித்திரைத் திருவிழாவுக்காக கள்ளழகர் மதுரை வந்து திரும்பியதில், பக்தர்கள் அளித்துள்ள உண்டியல் காணிக்கையாக ரூ. 49.51 லட்சம் கிடைத்துள்ளது.

  சித்திரைத் திருவிழாவுக்கு அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகருடன் 20-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகளில் உண்டியல்களும் மதுரைக்கு வருகின்றன. இந்நிலையில், திருவிழா முடிந்து அழகர்கோவிலுக்கு கொண்டுவரப்படும் உண்டியல்கள், திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன.   உண்டியல்களில் ரூ. 49.51 லட்சம் ரொக்கம் மற்றும் தங்கம் 66 கிராம், வெள்ளி 122 கிராமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

 இது கடந்த ஆண்டு உண்டியல் வருமானத்தை விட ரூ. 2.50 லட்சம் அதிகமாகும் என, திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.