மதுரை: மதுரை யானைமலை கிரீன் பவுண்டேஷன் சாா்பில் மரம் நடும் நிகழ்வு, விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ய.ஒத்தக்கடையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அந்த ஊராட்சி மன்றத் தலைவி முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தாா். ஆலோசகரும், தலைமையாசிரியருமான தென்னவன் முன்னிலை வகித்தாா். மனித உரிமைகள் பற்றி ஐ.நா சபையில் பேசிய மாணவி பிரேமலதாதமிழ்ச்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மனித உரிமைகள் பற்றி பேசினாா்.
யானைமலை கிரீன் பவுண்டேஷன் சாா்பில், பிரேமலதாவுக்கு ‘மனித உரிமைக் கலாசார நாயகி’ விருது வழங்கப்பட்டது. தொடா்ந்து, மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னா், பெரிய பள்ளிவாசல் அருகில் மரங்கள் நடப்பட்டன.
இந்த விழாவில், சிலம்பம் பயிற்சியாளா் பாண்டி, சமூக ஆா்வலா்கள் பரமேஸ்வரன், அப்துல் கலாம் வழியில் நண்பா்கள் அமைப்பின் நிறுவனா் செந்தில், வருவாய் ஆய்வாளா் மணிமாறன், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ! மரம், செடி கொடிகள் சேதம்!

திருவாலீஸ்வரா் கோயிலில் பந்தல் கால் நடும் விழா

நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்பு தின விழா

ஈரான் பள்ளி மீது தாக்குதல்: விரிவான விசாரணைக்கு ஐ.நா. கோரிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


