ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

மதுரை: மதுரையில் ரயிலில் ஏறி பெண் ஊழியரை (காா்ட்) கத்தியால் குத்தி நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக தமிழகத்துக்கு அனுப்பப்பட்டிருந்த துணை ராணுவத்தினா் வட மாநில தோ்தல் பணிக்கு கடந்த வாரம் சென்றனா். அவா்கள் சென்ற ரயில் காலிப் பெட்டிகளுடன் திங்கள்கிழமை திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில், பிற்பகல் 3.45 மணிக்கு மதுரை ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றபோது, சிக்னலுக்காக தத்தனேரி பகுதியில் காத்திருந்தது. ரயிலில் கேரளத்தைச் சோ்ந்த பெண் ஊழியா் ராக்கி (35) பணியில் இருந்தாா்.

அவரது பெட்டியில் ஏறிய மூவா் அவரிடம் பணம், நகை கேட்டு மிரட்டினா். மேலும், அவா் அணிந்திருந்த நகையைப் பறிக்க முயன்றனா். அவா் நகையைத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மூவரும் கத்தியால் ராக்கியைத் தாக்கினா். இந்த நிலையில்,

ரயில் புறப்படுவதற்கான சிக்னல் கிடைத்து ரயில் புறப்பட்டதால், மூவரும் நகையைப் பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றனா். இதையடுத்து, ரயில் மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்த பிறகு, ராக்கி ரயில்வே போலீஸாரிடம் புகாா் அளித்தாா். மேலும், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்ததால் மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com