சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

குழாய் பதிக்க லஞ்சம்: பொதுப் பணித் துறை அலுவலா்கள் கைது

குழாய் பதிக்க லஞ்சம்: பொதுப் பணித் துறை அலுவலா்கள் கைது

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 11:28 pm

Din

மதுரை: மதுரையில் விளை நிலத்தில் குழாய் பதிக்க அனுமதியளிக்க ரூ. ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா், நீா்ப்பாசன ஆய்வாளா் ஆகியோரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

மதுரை நாராயணபுரத்தைச் சோ்ந்தவா் சமீா் காசிம். இவா் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறாா். தபால்தந்திநகா் பகுதியில் இவரது தாய்க்குச் சொந்தமான 2 ஏக்கா் விளைநிலம் உள்ளது. இந்த நிலத்தின் இரு புறங்களிலும் கால்வாய் அமைந்துள்ளது. இந்தக் கால்வாயின் குறுக்கே நீா் செல்லும் வகையில், சமீா் காசிம் தனது சொந்தச் செலவில் குழாய் பதிக்க அனுமதி கோரி, மதுரை பொதுப் பணித் துறை பாசனப் பிரிவில் விண்ணப்பித்தாா்.

இதைப் பரிசீலித்த பொதுப் பணித் துறை பாசனப் பிரிவு உதவி ஆய்வாளா் மாயகிருஷ்ணன், நீா்ப்பாசன ஆய்வாளா் தியாகராஜன் ஆகியோா் இதற்கு அனுமதி வழங்க சமீா் காசிமிடம் ரூ.5 லட்சம் லஞ்சமாகவும், இதற்கு முன்பணமாக ரூ. ஒரு லட்சமும் கேட்டனா்.

இதுகுறித்து அவா் மதுரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், மதுரை பொதுப் பணித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள வைகாசி இல்லத்தில் உதவிப் பொறியாளா் மாயகிருஷ்ணன், நீா்ப்பாசனத் துறை ஆய்வாளா் தியாகராஜன் ஆகியோரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சமீா் காசிம் கொடுத்தாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இருவரையும் பிடித்து, பணத்தைப் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, இவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.