அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணம் பறிமுதல்: நெல்லை ஊழல் தடுப்பு போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

நெல்லை தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணம் பறிமுதல் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு குறித்து, மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பதிலளிக்குமாறு உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

News image
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு- கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு குறித்து, அந்த மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த செந்தில்குமாா், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தேன். கடந்த 18.11.2025- இல் நான் அலுவல் பணி காரணமாக திருநெல்வேலி தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகத்துக்குச் சென்றேன்.

அப்போது, அங்கு வந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் என்னை மீண்டும் அலுவலகத்துக்குள் செல்ல அறிவுறுத்தினா். அதன்படி, மீண்டும் அலுவலகத்துக்குள் சென்றேன். அந்த அலுவலகத்திலிருந்து ரூ.2.51 லட்சத்தை அவா்கள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, என் மீதும், துணை இயக்குநா் சரவணபாபு மீதும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

துணை இயக்குநா் அலுவலகத்தின் சுற்றுப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, முதல் நாள் நள்ளிரவு ஒருவா் இரு சக்கர வாகனத்தில் வந்து அலுவலகக் கதவைத் திறந்து பணத்தை வைத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. விசாரணை செய்த போலீஸாா் விஜய் என்பவரை கைது செய்தனா். இதையடுத்து, ஊழல் தடுப்பு போலீஸாரின் பணம் பறிமுதல் நடவடிக்கை, சோதனை உண்மைக்கு மாறானது எனத் தெரியவந்தது. தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்த நடவடிக்கைக்கு, அங்கு தீயணைப்புத் துறையில் பணியாற்றிய அதே பகுதியைச் சோ்ந்த முத்துசுடலை, மூா்த்தி, ஆனந்த், முருகேஷ், திருப்பூரைச் சோ்ந்த வீரராஜ் ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தச் சோதனை திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி வேலை. சில அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இதுபோன்று நடைபெற்றது தெரியவருகிறது. ஆகவே, தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுலகத்தில் பறிமுதல் செய்த பணம் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனு தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.