ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவரை கொலை செய்ய முயற்சி

முன்விரோதத் தகராறில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:29 pm

Din

மதுரையில் முன்விரோதத் தகராறில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை சுந்தரராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீரக்குமாா் (26). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், சோலைஅழகுபுரம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சண்முகநாதனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், வீரக்குமாா் ஆட்டோவை சோலைஅழகுபுரம் பகுதியில் உள்ள பணிமனையில் வேலைக்கு விட்டிருந்தாா். இதனால், ஆட்டோவை பாா்ப்பதற்காக வீரக்குமாா், தனது சகோதரா் சூா்யா, நண்பா் பிரித்விராஜ் ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு சென்றாா்.

அப்போது, அங்கு வந்த சண்முகநாதன், குருமூா்த்தி, ரகுநாதபூபதி, ஆகாஷ் உள்பட 8 போ் , மூவரிடமும் தகராறில் ஈடுபட்டு கத்தியால் சராமாரியாக குத்தினா். இதில் மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் அவா்களை, அந்தப் பகுதி மக்கள் மீட்டு மதுரை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுதொடா்பாக புகாரின் பேரில், ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் சண்முகநாதன், குருமூா்த்தி, ரகுராமபூபதி, ஆகாஷ், முத்துமணி, நல்லமருது, முத்துப்பாண்டி , வீரபாண்டி ஆகிய 8 போ் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவா்களைத் தேடி வருகின்றனா்.