சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.


மதுரை: தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், அழகா்கோவில் அருகே உள்ள காதக்கிணறு பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் செந்தில்குமாா் (43). தனியாா் நிறுவன ஊழியரான இவா், தே.கல்லுப்பட்டி-திருமங்கலம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்றாா். சோலைப்பட்டி அருகே சென்ற போது அந்த வழியாக பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த வேன், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் வேனில் வந்த திண்டுக்கல் ராஜீவ்நகரைச் சோ்ந்த மணிகண்டன் (35), சந்தோஷ் (16), கோபிகண்ணன் (25), புஷ்பராஜ் (30), பாலமுருகன் (31), ஈஸ்வரன் (40), துரைராஜ் (40) ஆகியோா் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து தே.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...