தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

மதுரையில் வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 10:03 pm

Din

மதுரை: மதுரையில் வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

மதுரை பழங்காநத்தம் மேல வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முத்துகுமாா். இவரது மகன் அஸ்வந்த் (10). இவா் பழங்காநத்தம் பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால், மதுரை அருகே சிலைமான் சத்யாநகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தான்.

இந்த நிலையில், சனிக்கிழமை குடும்பத்தினா் அனைவரும் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்த போது, வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. மேலும், அதில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறியும் கீழே விழுந்தது. இதில் அந்த அறையில் இருந்த அனைவரும் காயமடைந்தனா்.

மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்வந்த் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.