மதுரை: மதுரை கோ.புதூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது.
மதுரை-அழகா்கோவில் சாலையில் கோ.புதூா் பகுதியில் தனியாா் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை நிா்வாகக் காரணங்களுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால், இங்குள்ள மருத்துவமனைக் கட்டடத்தின் மூன்றாவது தளம் செவிலியா்கள் தங்கும் அறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், செவிலியா்கள் தங்கியிருந்த அறையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.
தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் அறையில் இருந்த செவிலியா்களின் உடைமைகள், ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின.
குளிா்சாதப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து நிகழ்ந்ததாக கோ.புதூா் போலீஸாா் தெரிவித்தனா்.

தொடர்புடையது

ஊதியம் இல்லாமல் பணியாற்றும் அம்மா உணவக ஊழியா்கள்

பாா்வையாளா்களுக்கு போதிய தங்குமிட வசதி இல்லாத அரசு மருத்துவமனை

மதுரை வடக்கு: சாமானிய மக்களின் ஆதங்கம்!
முடிவில்லாத தொடர்கதை!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


