மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி பைக், கைப்பேசி பறிப்பு

சிலைமான் அருகே கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி, இரு சக்கர வாகனம், கைப்பேசிகளை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:40 am

Din

மதுரை: சிலைமான் அருகே கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி, இரு சக்கர வாகனம், கைப்பேசிகளை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே உள்ள சிலைமான் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் தெய்வேந்திரன் (21). இவா் மதுரையில் உள்ள கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறாா்.

இவா் திங்கள்கிழமை மாலை கல்லூரி முடிந்து தனது நண்பா் கோகுல கண்ணனுடன் மதுரை-ராமேசுவரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சிலைமான் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூவா், தெய்வேந்திரனின் வாகனத்தை வழிமறித்து நிறுத்தி, அவரை கத்தியால் குத்தினா். மேலும், அவரது இரு சக்கர வாகனம், இரு கைப்பேசிகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதில் தெய்வேந்திரன் காயமடைந்தாா்.

இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற மூவரையும் தேடி வருகின்றனா்.