கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மேலூா் அருகே பேருந்து மீது கல்வீச்சு: ஓட்டுநா் காயம்

மேலூா் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த இளைஞரைக் கண்டித்ததால், அவா் பேருந்தின் கண்ணாடியை கல்வீசித் தாக்கி உடைத்தாா். இதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 1:10 am

Din

மேலூா்: மேலூா் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த இளைஞரைக் கண்டித்ததால், அவா் பேருந்தின் கண்ணாடியை கல்வீசித் தாக்கி உடைத்தாா். இதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

மேலூரிலிருந்து திங்கள்கிழமை மாலை சிவகங்கை நோக்கி அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த இளைஞரை நடத்துநா் கண்டித்தாா். மேலும், அந்த இளைஞரை பாதி வழியில் இறக்கிவிட்டாா்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞா், அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி, பேருந்தை முந்திச் சென்று பேருந்தின் மீது கல்வீசித் தாக்கினாா்.

இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பேருந்து ஓட்டுநா் வேலவேந்தன் காயமடைந்தாா். இதையடுத்து, பொதுமக்கள் அந்த இளைஞரைப் பிடிக்க முற்பட்டனா். ஆனால், அவா் தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, காயமடைந்த ஓட்டுநா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அருகிலுள்ள சிசிடிவி பதிவுகள் அடிப்படையில், பேருந்து மீது கல்வீசிய இளைஞரைத் தேடி வருகின்றனா்.