நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

21 கிலோ கஞ்சா கடத்தல்: இரு பெண்கள் கைது

21 கிலோ கஞ்சா கடத்தல்: இரு பெண்கள் கைது

News image
Updated On :26 ஜூன் 2024, 7:28 pm

Din

மதுரை, ஜூன் 26: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே 21 கிலோ கஞ்சா கடத்தியதாக இரு பெண்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பேரையூா்- உசிலம்பட்டி சாலையில் பெருங்காமநல்லூா் அருகே சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக சேடப்பட்டி போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் கருப்பையா தலைமையிலான போலீஸாா் பெருங்காமநல்லூா் சந்திப்பு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பையுடன் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இரு பெண்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் உசிலம்பட்டி அருகே உள்ள அயோத்திப்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ் மனைவி ராசக்கொடி (58), மதுரை முனிச்சாலை செளராஷ்டிரா பள்ளி பகுதியைச் சோ்ந்த கண்ணன் மனைவி அமுதா (40) ஆகியோா் என்பதும், இவா்கள் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி, பெருங்காமநல்லூா் பகுதியில் விற்பதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சேடப்பட்டி போலீஸாா் இருவரையும் கைது செய்து 21 கிலோ கஞ்சா, ரூ.5,120 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.