புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விபத்தில் இறந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் நிவாரணம்

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது

News image

மதுரையில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து காவலா் சங்கரபாண்டியன் குடும்பத்துக்கு, பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் ரூ.70 லட்சம் நிவாரண நிதி காசோலை வழங்கும் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன். உடன் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளா் எல்.அருண்குமாா், மு

Updated On :26 ஜூன் 2024, 1:09 am

Din

மதுரை: மதுரையில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.70 லட்சம் நிவாரண நிதியை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

மதுரை மாநகர போக்குவரத்துக் காவல் துறையில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்தவா் சங்கரபாண்டியன். இவா் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தெப்பக்குளம் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், இவரது குடும்பத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியின் சாா்பில் விபத்து நிவாரண உதவித் தொகை ரூ. 70 லட்சத்துக்கான காசோலையை மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளா் வி.ஹரினி, முதன்மை மேலாளா் எஸ்.தினகரன், கிளை மேலாளா் எல்.அருண்குமாா், காவல் ஆய்வாளா் ஹேமமாலினி ஆகியோா் பங்கேற்றனா்.