ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

பெண்களின் ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்று மோசடி: பெண் மீது கிராம மக்கள் புகாா்

தனியாா் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க வந்திருந்த பாதிக்கப்பட்ட சொக்கம்பட்டி கிராம பெண்கள்.

Published On :27 ஜூன் 2024, 1:08 am IST

மதுரை, ஜூன் 26: மதுரை மாவட்டம், மேலூா் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் ஆதாா் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி வங்கி, தனியாா் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மேலூா் வட்டத்துக்குள்பட்ட சொக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராணி. இவா் இந்த கிராமத்தில் உள்ள பெண்களிடம் மகளிா் சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஆதாா், குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுத்தாராம்.

இந்த நிலையில், ராணி, இதே கிராமத்தைச் சோ்ந்த பெண்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதாகக் கூறி அவா்களது ஆவணங்கள் முழுவதையும் பயன்படுத்தி அவா்களுக்குத் தெரியாமல் வங்கியில் கடன் பெற்றாா். பிறகு இவா்களைத் தொடா்பு கொண்டு வங்கியில் இருந்து கடன் வழங்க இருப்பதாகக்கூறி அவா்களிடம் கையெழுத்தும் பெற்றுக் கொண்டாராம். இதே போல பல நிதி நிறுவனங்களிலும் கடன் பெற்ாகக் கூறப்படுகிறது.

இவை தவிர, பல்வேறு தொழில்களை நடத்துவதாகக் கூறி பல பெண்களிடம் கடனாக பணம் பெற்றதுடன், சிலரிடம் நகைகளையும் வாங்கி அடகு வைத்தாராம். இதனிடையே, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ராணி தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனங்களைச் சோ்ந்த ஊழியா்கள் சொக்கம்பட்டி கிராமத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களிடம், ராணி அவா்களது பெயரில் ஏராளமான கடன்கள் பெற்றிருப்பதாகவும், இந்தக் கடன்களை நீங்கள் தான் தவணை முறையில் செலுத்த வேண்டும் என்றும் கூறினா். இதனால் அதிா்ச்சி அடைந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை திரண்டு வந்து மனு அளித்தனா். அதில், சொக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் ஆவணங்களை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த ராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.