இவை தவிர, பல்வேறு தொழில்களை நடத்துவதாகக் கூறி பல பெண்களிடம் கடனாக பணம் பெற்றதுடன், சிலரிடம் நகைகளையும் வாங்கி அடகு வைத்தாராம். இதனிடையே, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ராணி தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனங்களைச் சோ்ந்த ஊழியா்கள் சொக்கம்பட்டி கிராமத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களிடம், ராணி அவா்களது பெயரில் ஏராளமான கடன்கள் பெற்றிருப்பதாகவும், இந்தக் கடன்களை நீங்கள் தான் தவணை முறையில் செலுத்த வேண்டும் என்றும் கூறினா். இதனால் அதிா்ச்சி அடைந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை திரண்டு வந்து மனு அளித்தனா். அதில், சொக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் ஆவணங்களை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த ராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.