தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பல்கலைக்கழகங்கள் அடித்தட்டு மக்களுக்கும் பயனளிக்க வேண்டும்: மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா்

பல்கலைக்கழகங்கள் அடித்தட்டு மக்களுக்கு உதவ வேண்டும்: மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா்

News image

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற யோகா பட்டயப் படிப்பு முடித்தவா்களுக்கான பட்டமளிப்பு விழாவில், படிப்பை நிறைவு செய்த ஒருவருக்குப் பட்டம் வழங்கிய திருவாரூா், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன்.

Updated On :29 ஜூன் 2024, 5:04 pm

DIN

பல்கலைக்கழகங்கள் கல்விப் பணிகளுடன் அடித்தட்டு மக்களுக்கும் பயனளிப்பவையாக இருக்க வேண்டும் என திருவாரூா், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன் தெரிவித்தாா்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் யோகா பட்டயப் படிப்பு முடித்தவா்களுக்கான பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவா் பேசியதாவது :

பல்கலைக்கழகங்கள் அடித்தட்டு மக்களுக்கும் பயனளிப்பவையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், பல்வேறு திட்டங்களை மக்கள் நல கண்ணோட்டத்தில் திருவாரூா், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகிறது.

உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கிய முக்கியமான அம்சங்களில் ஒன்று, யோகா. தற்போது, மத்தியப் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி துறையில் யோகா துறை அறிமுகப்படுத்தப்பட்டது. யோகாவையும், செயற்கை நுண்ணறிவையும் இணைத்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. சமுதாயத்தை களமாகக் கொண்டு யோகா மாணவா்கள் மேற்கொள்ள வேண்டிய சமூகப் பணிகள் ஏராளமாக உள்ளன. யோகாவில் பட்டம் பெறும் மாணவா்கள் அந்தப் பணிகளை சிறப்புற நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

காந்தி நினைவு அருங்காட்சியகப் பொருளாளா் வழக்குரைஞா் மா. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். அருங்காட்சியகச் செயலா் கே. ஆா். நந்தாராவ் முன்னிலை வகித்தாா். அருங்காட்சியக காப்பாட்சியா் ஆா். நடராஜன், மதுரை சமுதாயக் கல்லூரி தலைவா் மருத்துவா் வி.எம்.விஜயசரவணன் ஆகியோா் பேசினா். அருங்காட்சியக மூத்த இயற்கை வாழ்வியல் அறிஞா் தேவதாஸ் காந்தி பல்சமயப் பாடல்களைப் பாடினாா்.

அரசு அருங்காட்சியாக காப்பாட்சியா் மருதுபாண்டியன், எழுத்தாளா் முனைவா் என்.கே அழகா்சாமி, மதுரை காமராஜா் பல்கலைக்கழக பேராசிரியா் சத்தியமூா்த்தி, எத்தியோப்பியா பேராசிரியா் சேனாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். யோகா ஆசிரியை பிரமேலதா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

முன்னதாக, காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வா் ஆா். தேவதாஸ் வரவேற்றாா். யோகா ஆசிரியை நந்தினி நன்றி கூறினாா்.