

மதுரையில் ஓட்டுநரை கத்தியால் குத்தி கைப்பேசி, ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கைப்பாடம் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் குருசாமி (20). இவா் பல்லடம் பகுதியில் உள்ள தனியாா் காளான் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை நள்ளிரவில் மதுரை கோட்ஸ் மேம்பாலத்தில் இறங்கி, ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றாா்.
மேலவெளி வீதி எல்ஐசி அலுவலகம் அருகே சென்ற போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா் குருசாமியை கத்தியால் குத்தி, அவரது கைப்பேசி, ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்து திலகா்திடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மூவரையும் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பக்கத்து வீட்டுக்காரரைக் கத்தியால் குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

இளைஞரை மிரட்டி ரூ. 30 ஆயிரம் பறிப்பு

குப்பைக் கொட்டியதை கண்டித்த இளைஞா் கத்தியால் குத்தி கொலை
மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

