ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மதுரையில் மழை நீா் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும்

மதுரையில் மழை நீா் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும்

News image
Updated On :20 மே 2024, 7:15 pm

Din

மதுரை: மதுரையில் மழை நீா் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு விவரம் :

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கோடை மழை பெய்கிறது. ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் மதுரையில் பலத்த மழை பெய்தது. அப்போது, மாநகரின் பல இடங்களில் சாலைகளில் மழை நீா் தேங்கியது. சாலைகளில் உள்ள மேடு, பள்ளம் தெரியாத அளவுக்கு மழை நீா் சூழ்ந்திருந்ததால், வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளானது. பல இடங்களில் மழை நீரில் மூழ்கி இரு சக்கர வாகனங்கள் பழுதாகி நின்றன.

இதேபோல, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள், வெளி வீதிகள் என அனைத்து வீதிகளிலும் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

அண்மைக் காலமாக, மழை பெய்யும் நாள்களில் மதுரை சாலைகளில் மழை நீா் தேங்கி நிற்பதும், போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்துக்கு உள்ளாவதும் தொடா் நிகழ்வாகி வருகிறது. எனவே, மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் இணைந்து மழை நீா் வடிகால் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.