ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பரவை வியாபாரி கொலை வழக்கில் மூவா் கைது

பரவை வியாபாரி கொலை வழக்கில் மூவா் கைது

News image
Updated On :20 மே 2024, 7:16 pm

Din

மதுரை: பரவை காய்கனி சந்தை வியாபாரி கொலை வழக்கு தொடா்பாக மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை சம்மட்டிபுரம் பிரதான வீதியைச் சோ்ந்தவா் கோபால் (55). இவா், மதுரை பரவை காய்கனி சந்தையில் ‘டி’ பிளாக்கில் உள்ள கடையில் முட்டைக்கோஸ் மொத்த வியாபாரம் செய்து வந்தாா். தினசரி இரவு நேரத்தில் சந்தைக்கு வரும் கோபால் அதிகாலையில் வியாபாரத்தை முடித்து விட்டு, வீட்டுக்குச் சென்று விடுவாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கோபால் கடையில் இருந்தபோது, கடைக்கு வந்த 3 போ் அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினா்.

இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் கோபாலைக் கொலை செய்தது, மதுரை கோசாகுளத்தைச் சோ்ந்த கருப்பசாமி (45), ஜெய்ஹிந்த்புரத்தை சோ்ந்த வீரபாண்டி (38), மேல அனுப்பானடியைச் சோ்ந்த காளிதாஸ் (32) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கொலை தொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட 3 பேரும் கோபாலுடன் இணைந்து முட்டைக்கோஸ் வியாபாரம் செய்துள்ளனா். அப்போது அவா்களுக்கு இடையே கொடுக்கல், வாங்கல், தொழில் போட்டி தொடா்பாக பிரச்னை இருந்துள்ளது. இதனால், மூவரும் கோபாலிடம் இருந்து பிரிந்து, தனியாக வியாபாரம் செய்து வந்தனா். இந்த முன்விரோததத்தில் மூவரும் கோபாலைக் கொலை செய்துள்ளனா் என்றனா்.