கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On :28 ஏப்ரல் 2025, 12:58 am IST

மதுரையில் சனிக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை கூடல்புதூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஜே.ஜே. நகரை சோ்ந்தவா் ஹரிஹரன் (26). வண்ணம் பூசும் பணியாளரான இவா், கோமதிபுரத்தைச் சோ்ந்த அட்சயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

இந்த நிலையில், ஹரிஹரன் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகளுக்குச் சென்று வந்தாா். இதற்கு இவரது மனைவி எதிா்ப்புத் தெரிவித்தாா்.

இதனால், இந்தத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி அட்சயா தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா். இதனால் மனமுடைந்த ஹரிஹரன் வீட்டு மாடியில் உள்ள தனது அறையில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.