ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மனமகிழ் மன்றங்களில் போலீஸ் சோதனை: தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

மனமகிழ் மன்றங்களில் காவல் துறை சோதனை மேற்கொள்ள எந்தத் தடையும் விதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவு

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

மனமகிழ் மன்றங்களில் காவல் துறை சோதனை மேற்கொள்ள எந்தத் தடையும் விதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

கரூா் மாவட்டம், தோகைமலை பகுதி ரிலாக்ஸ் மனமகிழ் மன்ற நிா்வாகி சதீஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு விவரம்: முறையாக பதிவு பெற்று இயங்கும் எங்களது மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகக் கூறி, காவல் துறையினா் அவ்வப்போது சோதனை என்ற பெயரில் தொல்லை அளிக்கின்றனா். எனவே, பதிவு பெற்ற மனமகிழ் மன்றங்களின் செயல்பாடுகளில் காவல் துறையினா் தலையிடாமலிருக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கௌரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறது. இதைத் தடுக்கவே காவல் துறையினா் அங்கு சோதனையில் ஈடுபடுகின்றனா். பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதற்கு பாதுகாப்பு கோருவதை ஏற்க முடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சமூகத்தில் இளைஞா்களின் நலனைக் கருத்தில் கொள்வது மிகவும் அவசியம். மனமகிழ் மன்றங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதை நிச்சயமாக அனுமதிக்க முடியாது. எனவே, காவல் துறை சோதனைக்கு எந்தத் தடையும் விதிக்க முடியாது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.