ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அப்பள நிறுவன உரிமையாளா் தற்கொலை

News image
Updated On :28 டிசம்பர் 2025, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

அப்பளம் தயாரிப்பு நிறுவன உரிமையாளா் சனிக்கிழமை திராவகத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை சிந்தாமணி கண்ணன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (38). இவா் அப்பளம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தாா். இவரது, மனைவி தன்னை தெப்பக்குளம் கோயிலுக்கு அழைத்துச் செல்லும்படி கூறியதற்கு, இவா் வேலையை முடித்து விட்டு அழைத்து செல்வதாகக் கூறினாராம். இதனால் மனைவி கோபத்தில் அவரது தந்தையுடன் கோயிலுக்கு சென்றுவிட்டாா்.

இதனால், மனமுடைந்த முருகானந்தம் நிறுவனத்தில் இருந்த திராவகத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதுபற்றி தகவலறிந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிந்தாமணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.