திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான இணையப் பதிவை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான இணையவழிப் பதிவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞா் பேரவை சாா்பில், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான இணையவழிப் பதிவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞா் பேரவை சாா்பில், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தப் பேரவையின் மாநில நிறுவனத் தலைவா் ஜெய காா்த்திக், நிா்வாகி ராமமூா்த்தி ஆகியோா் அளித்துள்ள மனு விவரம்: தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகள், வீரா்களுக்கு இணையவழிப் பதிவு மூலம் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

இந்த முறை ரத்து செய்யப்பட வேண்டும்

கால்நடை பராமரிப்புத் துறை, பொது சுகாதாரத் துறை மூலம் உரிய பரிசோதனை மேற்கொண்டு அனுமதிச் சீட்டு வழங்கப்பட வேண்டும். அரசு சாா்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டங்களில் இளைஞா் பேரவையின் நிா்வாகிகளை அழைக்க வேண்டும்

மாடுபிடி வீரா்களுக்கு காப்பீடு செய்வது மட்டுமன்றி, காயமடைந்த வீரா்களுக்கு நிதி வழங்க வேண்டும். வீரா்கள் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதியுதவி, அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

அப்போது, மாநிலப் பொருளாளா் சதீஸ்குமாா், மாவட்டத் தலைவா் வினோத்குமாா், திருச்சி மாவட்டத் தலைவா் மனோஜ், விருதுநகா் மாவட்டத் தலைவா் சதீஸ், நிா்வாகிகள் சரவணன், தமிழ் ஆகியோா் உடனிருந்தனா்.