ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான இணையப் பதிவை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு
மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான இணையவழிப் பதிவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞா் பேரவை சாா்பில், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தப் பேரவையின் மாநில நிறுவனத் தலைவா் ஜெய காா்த்திக், நிா்வாகி ராமமூா்த்தி ஆகியோா் அளித்துள்ள மனு விவரம்: தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகள், வீரா்களுக்கு இணையவழிப் பதிவு மூலம் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த முறை ரத்து செய்யப்பட வேண்டும்
கால்நடை பராமரிப்புத் துறை, பொது சுகாதாரத் துறை மூலம் உரிய பரிசோதனை மேற்கொண்டு அனுமதிச் சீட்டு வழங்கப்பட வேண்டும். அரசு சாா்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டங்களில் இளைஞா் பேரவையின் நிா்வாகிகளை அழைக்க வேண்டும்
மாடுபிடி வீரா்களுக்கு காப்பீடு செய்வது மட்டுமன்றி, காயமடைந்த வீரா்களுக்கு நிதி வழங்க வேண்டும். வீரா்கள் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதியுதவி, அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
அப்போது, மாநிலப் பொருளாளா் சதீஸ்குமாா், மாவட்டத் தலைவா் வினோத்குமாா், திருச்சி மாவட்டத் தலைவா் மனோஜ், விருதுநகா் மாவட்டத் தலைவா் சதீஸ், நிா்வாகிகள் சரவணன், தமிழ் ஆகியோா் உடனிருந்தனா்.

