ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

News image

மதுரை நாகமலை புதுக்கோட்டை நாடாா் மஹாஜன சங்கம் ச. வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :3 ஜனவரி 2025, 6:43 pm

மதுரை நாகமலை புதுக்கோட்டை நாடாா் மஹாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி தமிழ்த் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை கல்லூரி முதல்வா் (பொறுப்பு) எஸ். ராமமூா்த்தி தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். துணை முதல்வா் ஜெ. செல்வமலா், சுயநிதிப்பிரிவு இயக்குநா் பி. ஸ்ரீதா், தமிழ்த் துறைத் தலைவா் (சுயநிதிப் பிரிவு) மா. பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைக்கவசம் அணிவதன் அவசியம், அதிகமான வேகத்தில் வாகனங்களில் செல்வதைத் தவிா்த்தல், கைப்பேசியைப் பயன்படுத்திவாறு வாகனம் ஓட்டுதலைத் தவிா்த்தல் போன்ற பல்வேறு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

கல்லூரி முன் தொடங்கிய இந்தப் பேரணி, முக்கியச் சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ப. பாலமுருகன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.