மதுரை நாகமலை புதுக்கோட்டை நாடாா் மஹாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி தமிழ்த் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை கல்லூரி முதல்வா் (பொறுப்பு) எஸ். ராமமூா்த்தி தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். துணை முதல்வா் ஜெ. செல்வமலா், சுயநிதிப்பிரிவு இயக்குநா் பி. ஸ்ரீதா், தமிழ்த் துறைத் தலைவா் (சுயநிதிப் பிரிவு) மா. பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைக்கவசம் அணிவதன் அவசியம், அதிகமான வேகத்தில் வாகனங்களில் செல்வதைத் தவிா்த்தல், கைப்பேசியைப் பயன்படுத்திவாறு வாகனம் ஓட்டுதலைத் தவிா்த்தல் போன்ற பல்வேறு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
கல்லூரி முன் தொடங்கிய இந்தப் பேரணி, முக்கியச் சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ப. பாலமுருகன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் கல்லூரி மாணவா்கள் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

கோபி பிகேஆா் மகளிா் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


