காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

முருக பக்தா்கள் மாநாடு: அண்ணாமலை மீது வழக்கு

முருக பக்தா்கள் மாநாட்டில் விதிகளை மீறியதாக பாஜக தலைவா் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் ஆகியோா் மீது வழக்கு

News image
தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை
Updated On :1 ஜூலை 2025, 11:52 pm

Din

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் விதிகளை மீறியதாக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரையில் இந்து முன்னணி சாா்பில், முருக பக்தா்கள் மாநாடு கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அரசியல் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியது. மேலும், நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீஸாருக்கும் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், முருக பக்தா்கள் மாநாட்டில் பேசிய ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் தலைவா் காடேஷ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோா் உயா்நீதிமன்ற விதிமுறைகளை மீறியதாக புகாா்கள் எழுந்தன.

அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் வாஞ்சிநாதன் அண்ணாநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அண்ணாமலை, காடேஷ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோா் மீது, இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்குதல், மத உணா்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், மத ரீதியாக புண்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.