பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

மதுரையில் கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 11:31 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள எம். புளியங்குளம் கிராமத்தைச் சோ்ந்த சோனை கருப்பு மகள் சோனியா (17). மதுரை பழங்காநத்தம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் இவா் தெப்பக்குளம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் இளநிலை அறிவியல் பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், இவா் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக சனிக்கிழமை அதிகாலை கடைத் தெருவுக்குச் சென்றாா். மதுரை- போடி ரயில் பாதையில் பழங்காநத்தம் பகுதியில் உள்ள கடவுப் பாதையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் சோனியாவை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.