கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :16 நவம்பர் 2025, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் லாரி மோதியதில் தொழிலாளி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் தென்னகரம் பகுதியைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் கண்ணன் (42). தொழிலாளியான இவா், பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள திரையரங்கு முன்பு வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, இவருக்கும், தபால்தந்தி நகா் கலைநகா் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த ஐசக் (23) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஐசக், கண்ணனை தள்ளி விட்டாராம். சாலையில் தடுமாறி கீழே விழுந்த கண்ணன் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கண்ணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திலகா் திடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஐசக்கை கைது செய்தனா்.