எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

இரு சக்கர வாகன விபத்தில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள சருகுவலையப்பட்டியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் நாகராஜன் (68). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மேலூரிலிருந்து சருகுவலையபட்டிக்கு சென்றாா்.

நாவினிப்பட்டி விலக்கு அருகே சென்றபோது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேலூா் போலீஸாா் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பங்குடி அருகே உள்ள தீா்த்தனிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துக்கருப்பன் மகன் ராமன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.